• 1. வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக

  • 2. தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

  • 3. அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.

  • 4. ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.

  • 5. மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.

  • 6. குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.

  • 7. முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.

  • 8. இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.

  • 9. இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.

  • 10. மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.

  • 11. (திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,

  • 12. (தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,

  • 13. நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.

  • 14. அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.

  • 15. நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.

  • 16. நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.

  • 17. எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.

பகிர்
logo
logo
logo
logo